Saturday, October 19, 2019

பொது அறிவு வினா விடைகள்

*தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்? - ஸ்ரி நாராயண குரு

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றியவர்? - அம்பேத்கர்

*1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் பம்பாய்க்கு அருகில் மகத் பேரணியைத் தலைமையேற்று நடத்தியவர்? - அம்பேத்கர்

* மக்கள் மனதில் சுயமரியாதை, பகுத்தறிவு பெண் விடுதலை, ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் ஆகியவற்றிற்கு வித்திட்டவர்? - பெரியார்

* நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் கிடைப்பது ------- ஆகும். - தலா வருமானம்

*தனி நபர் வருமானத்தைப் பற்றி முதன் முதலாகக் கூறியவர்? - தாதா பாய் நௌரோஜி

* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பே இந்தியாவின் -------- என அழைக்கப்படுகிறது. - புனுP

*புனுPயின் நவீன கருத்து முதன் முதலில் யாரால் உருவாக்கப்பட்டது? - சைமன் குஸ்நட்

* ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு ------------ சரியானதாகும். - மனிதவள மேம்பாடு குறியீடு

* மனிதவள மேம்பாட்டுக் குறியீடு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? - முகஹப் - உல்.ஹிக்

* மனிதவள மேம்பாட்டுக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - 1990

* பு+கோள ரீதியாக தமிழ்நாடு எத்தனையாவது மாநிலம் ஆகும்? - 11-வது மாநிலம்

* தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்? - 6-வது மாநிலம்

*தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 2-வது இடம்

*தலா வருமான முதலீடு, நேரடி அந்நிய முதலீடு மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவற்றில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

* முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கிய சோழப்பேரரசு, எதன் எல்லை வரைப் பரவியது? - ஒரிசா

* பன்னிரெண்டாம் நூற்றாண்டில் முதன்முதலில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்ட இடம் எது? - டெல்லி

* சோழப்பேரரசு எந்த நூற்றாண்டின் இறுதியில் மறைந்தது? - 13-ஆம் நு}ற்றாண்டு

* இந்தியாவிற்கு கி.பி(பொ.ஆ) 1498-ல் மேலைக்கடற்கரையில் வந்திறங்கியவர்கள் யார்? - போர்ச்சுகீசியர்கள்

*முஸ்லீம் ஆட்சியின் தாக்கம் யாருடைய ஆட்சியின்போது உணரப்பட்டது? - அலாவுதீன் கில்ஜி

*யாருடைய காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா உடனான வணிகம் பெருமளவில் விரிவடைந்தது? - சோழர்கள்

*ஒரு அரசனால் அல்லது அரசியால் ஆளப்படும் ஒரு நாடு? - அரசு

* ஒரு அரசனால் அல்லது அரசியால் ஆளப்படும் பல நாடுகளைக் கொண்ட நிலப்பரப்பு? - பேரரசு

* எந்த நு}ற்றாண்டில், இந்தியாவிற்கு நேரடி கடல் வழியைக் கண்டறிவதில் ஐரோப்பியர்கள் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர்? - 15-ஆம் நு}ற்றாண்டு

*வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை எந்த ஆண்டு வந்தடைந்தார்? - கி.பி.(பொ.ஆ) 1498

*கி.பி.(பொ.ஆ) 1510-ல் ---------- கைப்பற்றப்பட்டு இந்தியாவில் போர்சுக்கீசிய அரசின் மையமாக மாறியது. - கோவா

* சோழப் பேரரசின் விரிவாக்கம் யாருடைய காலத்தில் தொடங்கியது? - முதலாம் ராஜராஜன்

* சீக்கிய மதம் 15 மற்றும் 16-ஆம் நு}ற்றாண்டுகளில் வட இந்தியாவில் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? - குருநானக்

*அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத் தளபதியுமான ------------ தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது? - மாலிக்கபு+ர்

*தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் எந்தப் பேரரசு நிறுவப்பட்டதால் நிர்வாக, சமூக, நிறுவனக் கட்டமைப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது? - விஜயநகரப் பேரரசு

பொது அறிவு முக்கிய வினா விடைகள்


பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!

* நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதார குறியீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு

* உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம்? - தமிழ்நாடு

*குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்

* கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள மாநிலம்? - கேரளா

* தமிழகம் நீர் வளத்தில் 3 சதவீதமும், நிலப்பரப்பளவில் எத்தனை சதவீதமும் உள்ளது? - 4 சதவீதம்

*தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? - 17

* மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே ---------- என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது. - மதுரை மாவட்டம் கரடிக்குட்டம்

*இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு -------- ஆக உள்ளது. - 31.5மூ

*சமச்சீர் பாலின விகிதம் என்பது ------------- வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதை குறிக்கிறது. - பெண்களின்

*பாலின விகிதத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? - மூன்றாவது இடம்

*தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக உள்ளது? - குவைத்

*தமிழ்நாட்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(புளுனுP) சேவைத் துறையானது 63.70மூ பங்களிப்புடன் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்

*தொழில் துறை பங்களிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம்? - தமிழ்நாடு

*வரலாற்று ரீதியாகத் தமிழகம் ஒரு ------------- மாநிலமாகும். - வேளாண் மாநிலம்

* தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலம் உள்ளது? - ஏழு

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

*இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - 64 லட்சம்

* எத்தனை உறுப்பினர;கள் அரசியலமைப்பு சட்டத்தில் கையெழுத்திட்டனர;? - 284 பேர்

*இந்தியா, எதற்கு கருவு+லமாகத் திகழ்கிறது? - இலக்கியங்கள்

* இந்திய நாடு, பல்வேறு படையெடுப்புகளுக்கு உட்பட்ட போதிலும் இன்றும் பெரும் மாற்றம் இல்லாமல் விளங்குவது எது? - இந்தியப் பண்பாடு

*ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள்? - நவம்பர் 19

* இந்தியா மொழியின் அடிப்படையில் பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1956

*ஐக்கிய அமெரிக்க நாட்டை விட இந்தியா எத்தனை மடங்கு சிறியது? - மூன்று

*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தலைமை தாங்கியவர் யார்? - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

*கோவா, டையு+ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1961

*தொலை தொடர்பு வசதிகளை அளிப்பதில் இந்தியா உலக நாடுகளிடையே ------- இடத்தில் உள்ளது. - பத்தாவது இடம்

*இந்தியாவில் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்? - ஆர்யபட்டா

* இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டங்களை நிறைவேற்ற இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு? - 1950

*இந்திய மாகாணம், பாகிஸ்தான் மாகாணம் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு? - 1947, ஆகஸ்ட் 15

* பல மனித இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது? - இந்தியா

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள் 

1. டெங்கு நோயானது ------------ காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது. - எலும்பு முறிப்பு

2. பைலேரியா என்ற நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணி எது? - வவுச்சேர்ரெரியா பான்க்ராப்டீ

3. பைலேரியா என்ற நோயானது ----------- என்ற கொசு இனம் கடிப்பதன் மூலம் கடத்தப்படுகிறது. - கியு+ளக்ஸ்

4. 2009-ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் எந்த நோயைப் பெரும் கொள்ளை நோய் என அறிவித்தது? - பன்றிக்காய்ச்சல்

5. ரெட்ரோ வைரஸ் ஏற்படுத்தும் எய்ட்ஸ் நோயானது, முதன் முதலில் எந்த இடத்தில், எந்த ஆண்டு கண்டுணரப்பட்டது? - அமெரிக்காவில் ஹட்டாய், 1981-ம் ஆண்டு

6. உலகளவில், தட்டம்மையால் இறந்தவர்களின் விகிதமானது எத்தனை சதவீதமாகக் குறைந்துள்ளது? - 7 சதவீதம்

7. நோய்த் தடுப்பு மருந்தளித்தல் மற்றும் பாஸ்டுரைசேஷன் என்ற நிகழ்விற்கு பெயர் பெற்றவர் யார்? - லுயிஸ் பாய்ஸ்டர்

8. விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் எவை? - பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல்

9. தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு ---------- ஆகும். - காவிரி

10. காவிரி ஆறு ------------ கிலோ மீட்டர் நீளம் கொண்டது. - 765

11. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள அணைகள் எவை? - மேட்டூர் அணை மற்றும் கல்லணை 

12. தமிழகத்தின் வேளாண்மைக்கான நீர் ஆதாரமாக விளங்குவது ---------- ஆகும் . தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை

13. தமிழகத்தில் முக்கிய உணவல்லாத பயிர்களில் ------------ முதலிடம் வகிக்கிறது. - தென்னை

14. தமிழகத்தில் முக்கிய உணவு பயிர்கள் எவை? - நெல், சோளம், கம்பு, கேழ்வரகு

15. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படாத நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தரிசு நிலம்

வாழ்க வையகம்

இல்லற வாழ்வில் சிறக்க



புது மாப்பிள்ளை

இதை செயார் செய்வோம்
பல வாலிபர்களினதும், யுவதிகளினதும்.வாழ்க்கை பிரகாசமான தாக மாறும்

ஒவ்வொரு தம்பதியினரும் திருமணத்திற்கு முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய *ஆண்கள் பற்றியதும் #தாம்பாத்தியம் பற்றியதுமான உண்மை இது.
வெட்கப்படாமல் Shareசெய்யுங்கள், கொமெண்ட் செய்யுங்கள்.
இது பற்றிய அடிப்படை அறிவில்லாமல் கண்டவர் ஆலோசனைகளை கேட்டு வாழ்க்கையை நாசம் செய்ய வேண்டாம்.

பாடல்களை எடுத்துக் கொண்டாலோ அதன் வரிகள் விடிய, விடிய என்றும்,
படங்களை எடுத்துக் கொண்டால் கடிகாரம் சுத்தி சுத்தி சேவல் கூவி, சூரியன் உதிக்கும் வரையிலும் நடைபெறும்,
முதல் இரவு / உடல் உறவுக் காட்சிகளையும், ஆபாசப்படங்களையும் பார்த்து விட்டு, பெரும் கற்பனைகளுடன் போனால், அங்கு எல்லாமே ஒரு சில விநாடிகளில் முடிந்து, கனவுகள் சிதைந்து விவாகரத்து வரை போன பல வரலாறுகள் உண்டு. இந்த அறியாமையில் இருந்துவெளி வாருங்கள்ி

*திருமணம் முடித்த புதிதுகளில் ஒரு ஆண் தன் மனைவியின் அருகில் சென்றாலோ, தொட்டாலோ, முத்தம் இட்டாலோ என்று எந்த நிலையில் வேண்டுமானாலும் கிளர்ச்சி அடைந்து உச்சத்தை அடைந்து விடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

*இதை எல்லாம் வெற்றியாக தாண்டி வந்து உறவில் ஈடு படத் தொடங்கிய அடுத்த கணமோ,
ஏன் சில சமயம் உறவு கொள்ளப் போகிறேன் என்று நினைத்த அடுத்த நொடியில் கூட உச்சத்தை அடைந்து விடலாம்.

இதற்கு பயந்து ஆண்மை அற்றவன், வி/து முந்துகிறது, என்னால் முடியவில்லையே என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொள்ளவோ, வைத்தியரிடம் ஓடவோ வேண்டாம். பொறுமையாக கீழே வாசியுங்கள்.

ஒரு ஆணினால் எவ்வளவு நேரம் உறவு கொள்ளலாம்? என்று பொதுவாக கேட்டால்,
அது ஒரு சில வினாடிகள் முதல் 3-4-5 ... நிமிடங்கள் வரை என்று கூறலாம். ஆனால்,

அதையே ஒரு ஆண் பிறிதொரு ஒரு ஆணிடம் கேட்டால் ஆகக் குறைந்தது 20-30 நிமிடங்கள் என்று தான் கதை அளப்பார்கள்
(பாவம் இந்தக் கதையை ஒரு புது மாப்பிள்ளை கேட்டால் அவர் நிலமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்

திருமணம் முடித்த புதிதுகளில்,
*புது அனுபவம்,தனிமையில் பெண்ணின் நெருக்கம், தன் மனைவியின் அழகு, கவர்ச்சி, ஜாடைமொழிகள்,தடுமாற்றம்,காதல், அவசரம் என்று பல உணர்வுகளும், உணர்ச்சிகளும் முட்டி மோதும் இந்த எக்சைட்மண்ட் ஆன தருணத்தில் நன்றாக இருந்த உறுப்பு உறவுக்கு தயாராகாமல் கூட இருக்க வாய்ப்புண்டு. இப்படியான விபத்துகள் இந்த கால கட்டத்தில் நடப்பது சகஜமப்பா

*இதன் விளைவு,
பல இரவுகள் ஆசையோடு இருவரும் நெருங்குவீர்கள்,ஆனால் வெறும் 20-30 செக்கன்களில் ஆண் உச்சத்தை அடைந்துவிடுவதால் நிராசை மட்டும் தான் மிஞ்சும்.

இதே நிலை சில வாரங்கள் , மாதங்கள் வரை தொடரலம். இருவரும் பொறுமை, ஆறுதல், தைரியம், நம்பிக்கை இதில் எதை இழந்தாலும் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

இது போன்ற கட்டத்தில் அந்த மனைவி கணவனுக்கு கொடுக்கும் தைரியமும், உற்சாகமும் மாத்திரம் தான் அவனை மனதளவில் தைரியப்படுத்தி, தாழ்வு மனப்பான்மை இன்றி நம்பபிக்கையுடன் அடுத்த முறை அவளை நெருங்க முயற்சிக்க வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

*வாகனத்தை கையில் எடுத்தால் முதலில் ஓட்டப் படிக்க வேண்டும், பின்னர் அதன் நுணுக்கங்களை அனுபவம் மூலம் எடுக்க வேண்டும் அதன் பின்னர் தான் பந்தயத்தில் குதிக்க வேண்டும் அப்படித் தானே அதே போல் தான் இங்கும்....

*வெறும் 20-30 செக்கன்கள் இருந்த விடயத்தை, சில நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் தொடர்ச்ச்சியாக தினமும், ஒவ்வொரு தடவை உறவு கொள்கையிலும் மேற் கொள்வதன் மூலம் சில மாதங்கள் செல்கையில் படிப்படியாக 1-2 நிமிடங்களாக அதிகரித்து 4-5-6.. என்று கூட நீட்டிச் செல்ல முடியுமாகும்.

*என்ன செய்யலாம்?

*என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.
*எங்கே உச்சத்தை அடைந்து விடுவேனோ என்ற பயம், பதட்டம் வரவே கூடாது.
*எவரும் பார்ப்பார்களோ, சத்தம் கேட்டு விடுமோ யாரும் வந்து விடுவார்களோ என்ற பயம் கூடவே கூடாது.
*மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
*அவசரம், அதீத வெறி, எதை செய்கிறோம் என்ற நிலை தடுமாறி செயல்பட கூடாது.
*முழு மூச்சாக உறவில் மாத்திரமே கவனம் செலுத்தினால், புற விளையாட்டின் (Fore play) நடுவில் கூட திடீர் என்று உணர்ச்சி தூண்டப்பட்டு உச்சத்தை அடைந்து விடும் சாத்தியம் உண்டு.
*புற விளையாட்டுகளில் (Fore Play) ஈடுபடும் போதும், உறவில் ஈடு படும் போதும் இடைக்கிடையே தண்ணீர் குடித்தல்,
உறவின் ஒரு அங்கமாக ஒரு சொக்லட் அல்லது, திராட்சை, அப்பில் போன்ற எதாவது ஒரு பழத்தையோ இருவரும் சாப்பிட்டு (ரொமாண்டிக் பைட் - இதற்கும் விளக்கம் தேவை இல்லை தானே
இடை வெளி எடுத்தல் போன்ற செயல்கள் உங்களை நிதானப்படுத்தும்.

(என்னடா இது, அந்த நேரத்தில் இதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? இவனுக்கு என்ன லூசா? என்று கேட்போருக்கு,
இது போல் இடை வெளி எடுக்கவும், நிதானமாக செயல்படவும் தான் புது மனத் தம்பதிகள்.அறையில் பழம், இனிப்பு என்று உணவுகள் வைக்கப்படுகிறது என்பது கொசுருத் தகவல் ஆகும்)

*அதே போன்று இந்த சந்தர்பங்களில் மூச்சை ஆழமாகவும், நிதானமாகவும் இழுத்து சுவாசிப்பதன் மூலம் உங்களை ஆசுவாசப்படுத்தி, நிதானம் இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
*உறவு கொள்ளும் போது எடுத்த எடுப்பில் எகிரிக் குதிக்காமல் நிதானத்தை மேற் கொள்ள வேண்டும்,
*உச்சத்தை அடைய பார்க்கையில் உடனடியாக இயக்கத்தை நிறுத்த வேண்டும்.
(இதன் போது மிகச் சிறிய அளவில் வி/து வெளிவரவும் சாத்தியம் உண்டு, இது சாதாரண நிகழ்வே)
உருப்பினை வெளியில் எடுத்தோ, எடுக்காமலோ அசைவற்று இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சிறு அசைவு கூட உச்சத்தை அடைய வைத்திடும். அதனால் அசைவுகளை #இருவரும் முழுதாக நிறுத்த வேண்டும்.
இப்படி நிறுத்தும் போதும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது இன்னும் நிதானத்தை தருவதுடன் பதட்டத்தை குறைக்கும்.
உறவு கொள்ளும் போதும், இடை நடுவில் உச்சத்தை அடையப் போகிறோம் என்பது விளங்கும் போதும் மூச்சை தம் பிடித்து நிறுத்திக் கொள்வதும், உங்கள் நேரத்தை அதிகரிக்கும்.
உறவு கொள்ளும் நிலைகளை (Position) மாற்றி செய்கையில் கூட விரைவாக உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை குறைக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை, நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்யவும் பொதுவாக சொல்லப்படும் நிலை (ஆண் கீழே பெண் மேலே)
இது போன்ற எளிய வழிகளை #ஒன்றாக சேர்த்து கையாளும் போது, அதற்கான பலன் மெதுவாக #கிடைத்தே #ஆகும்.அதில் எந்த வித சந்தேகமும் கிடையவே கிடையாது.

ஆனால் மிக முக்கியமான விடயம் என்ன என்றால்..
இது உடலும், மனமும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். மூன்று நாள் ஜிம் சென்று நாலாவது நாள் பாடிபில்டர் (Bodybuilders) ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போல் இங்கும் பதரினால் விடயம் சிதறிடும்.
நம்பிக்கை, பொறுமை, நிதானம், பயிற்சி உங்களுக்கான வழியை சரியாக காண்பிக்கும், அதற்கு காலமும் தேவைப்படும்.

*படங்களை போல் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் உறவில் திருப்தி கிடைக்காது என்றும் மனைவிடம் மானம் போய் விடும் என்றும் கூறி " மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்து கொண்டு போ, டெப்லட், ஸ்ப்ரே பாவி மச்சான்" என்று எல்லாம் சில அதி மேதாவிகள் தரும் மொக்கை ஆலோசனைக் கேட்டு விடாதீர்கள்.

*முதலில் சுய இன்பம் செய்துவிட்டு, பின்னர் உறவில் ஈடுபடும் போது களைப்பு அதிகமாக இருக்கும், சில சமயம் உறுப்பு தயார் நிலைக்கு வராமல் போகும், ஆண் உறுப்பில் வேதனை வரலாம். அல்லது,
*சுய இன்பம் செய்த பின் கூட எதிர்பாரா உச்சத்தை இடையில் அடைந்து விட்டால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது கடினம் ஆகிவிடும்.
*செயற்கை முறைகளில் டெப்லட், கிரீம்,ஸ்ப்ரே என்று முயற்சிகள் செய்து ஆண்மையை இழந்து விடாதீர்கள், மேலும் இவற்றை பாவித்து நீண்ட நேர உறவிற்கு மனைவியை பழக்கிக் கொண்டால் தினமும் அவர்கள் அதையே எதிர்பார்ப்பார்கள் உங்கள் வாழ்க்கை பாழாகிவிடும்.
*எனவே மனைவியிடம் போலி வீராப்பு காட்டாமல் இப்படித் தான் முதலில் இருக்கும் என்பதை விளக்கி அவளிடமே ஒவ்வொரு தடவையும் உறவில் ஈடுபடுங்கள்.
*மதுபானம், மற்றும் போதை ஏற்றிக்கொண்டு உறவு கொண்டால் இன்பமும் பெருகும், அதிக நேரமும் செயல்படலாம் என்ற போலிகளை நம்பி குழியில் விழுந்து விடாதீர்கள்.

*இது போல் இடை வெளி எடுத்து செயல்படும் போது முதலில் ஓரு சிறு அதிருப்தி பெண்களுக்கு வந்தாலும், யதார்த்த நிலையை அவர்கள் உணரும் போது அது ஒரு பொருட்டாக அவர்கள் மனதில் இருக்காது.

*இருவரும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

*உறவிற்கு தாயார் நிலையில் ஆண்களுக்கு நிறம் அற்ற ஒரு திரவம் சுரக்கும்.இது குறை கிடையாது.
*உறவு கொள்ளும் நேரம் ஒவ்வொரு முறையும் வித்தியாசப்படும், ஒரு தடவை ஒரு நிமிடம் என்றால் மறு தடவை முப்பது செக்கன் இருக்கும் அல்லது இரண்டு நிமிடம் இருக்கும் இது சர்வ சாதாரண நிகழ்வாகும்.
*ஆண் உறுப்பின் அளவிற்கும் உறவு கொள்ளும் நேரத்திற்கும், பெண்கள் திருப்தி அடைவதற்கும் எந்த விதமான விஞ்ஞான ரீதியான தொடர்பும் கிடையவே கிடையது.
(In fact எல்லா ஆண்களும் தன் உறுப்பு இன்னும் கொஞ்சம் நீ/மாக இருந்தால் நல்லமே என்று கவலைப்படுபது சாதாரண விடயம் ஆகும். பொய் என்றால் அவர்களையே கேட்டுப் பாருங்கள்

*சில நாட்களுக்கு வழமையான அளவை விட ஆண் உறுப்பு மெலிந்து காணப்படும், இதற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடி விட வேண்டம்  இதுவும் சாதாரண விடயமே. அது தானாக பழைய நிலைக்கு சில நாட்களில் திரும்பி விடும்.
*உறவு கொள்ளும் ஒவ்வொரு நேரமும் வாய், உடல் சுத்தம் அவசியம் பேணப்பட வேண்டும்.
*தேவை அற்ற ரோமங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.
*புகைத்தல், மது,கஞ்சா, பீடா என்று கண்டதையும் போட்டுக் கொண்டு மனைவியை நெருங்காதீர்கல்.

*உண்மையை கூறப்போனால், இது போன்ற தீய செயல்களை நிறுத்தி அந்த பணத்திற்கு பாதம், பிஸ்தா என்று தினமும் வாங்கி சாப்பிட்டால் இல்லற வாழ்வு சிறப்பிக்கும்

*ஆரோக்கியமான உணவு, உடல் பயிற்சிகளை தொடராக செய்து வருகையில் உடல் பலம் அதிகரிக்கும்.

*அருவருப்பான சில விடயங்களை செய்வதற்கு முண்டி அடித்து அவசரப்பட்டு, வற்புறுத்தல் உங்கள் மீதான வெறுப்பை யும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும். (ஒரு பக்குவ நிலை வந்ததன் பின்னர் தான் கணவன் மனைவிக்கு இடையில் அருவருப்பான எதுவும் கிடையாது என்பது புரிய வரும்)

*ஒரு மனிதனால் சாதாரணமாக உறவு கொள்ளக் கூடிய 2-3 நிமிடத்தை விந்து முந்துதல், ஆண்மைக் குறைபாட்டு நோய் என்று விளம்பரம் செய்து பிழைக்கும் போலி விளம்பரங்கள், ஆன்லைன் மசாலா டாக்டர்களின் கதைகளை கேட்டு மூளை கெட்டு, பித்துப் பிடித்து திரியாதீர்கள்.

*கண்ட கண்டவர்களிடம் கதை கேட்டு உங்கள் இன்பத்தை தொலைக்க போக வேண்டாம்.உங்களுக்கு உள்ள இன்பத்தை நேரம் எடுத்து, காலம் ஒதுக்கி உங்களுக்குள் தேடுங்கள். மன அழுத்தம் இன்றி இன்பமாக வாழ்வீர்கள்

*இது எல்லாம் தாண்டி இரண்டு மூன்று மாதம் வாழும் போது "அட இதுக்கு தான் இப்படி பயந்தேனா?இதற்கு தான் இப்படி டென்ஷன் ஆகிக் கொண்டு திரிந்தேனா?" என்ற ஒரு முதிர்ச்சிக்கு வரும் போது ஒரு சிரிப்பு வரும் பாருங்கள், அது உங்கள் இல்லற வாழ்வின் வெற்றிப்படியாகும்.

வாழ்த்துகள் 

டெங்கு தோலுரிக்கும் கட்டுரை

*டெங்கு தோலுரிக்கும் கட்டுரை !*

*இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.*

*டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.*

*மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.*

*இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.*

*எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.*

*சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.*

*தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.*

*உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.*

*நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.*

*ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.*

*வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.*

*சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.*

*இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).*

*உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.*

*இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.*

*சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.*

*உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?*

*தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.*

*எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.*

*மூக்கின் வழி சளியாகவும்.*
*பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.*
*தோலின் வழி வியர்வையாகவும்.*
*சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.*

*உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.*

*இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.*

*உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.*

*அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?*

*அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.*

*முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.*

*வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.*

*நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.*

*பல நாடுகளில் காய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.*

*இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.*

*உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.*

*சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.*

*ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.*

*நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.*

*தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.*

*குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?*

*காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.*

*"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."*

*புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.*

*ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.*

*அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.*

*ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.*

*மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.*

*அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.*

*இயற்கை விதி இரண்டு !*

*1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.*

*2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.*

*சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.*

*பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.*

*வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.*

*இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.*

*நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.*

*"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."*

*கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.*

*எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.*

*இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.*

*உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.*

*நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல்.*

*நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.*

*நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல்.*

*அவ்வளவுதாங்க.*

*அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.*

*இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.*

*இதை தான்*

*அண்டத்தில் உள்ளதே பிண்டம்*
*பிண்டத்தில் உள்ளதே அண்டம்*
*அண்டமும் பிண்டமும் ஒன்று தான்*
*அறிந்து தான் பார்க்கும் போதே.*

*என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.*

*இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு*

*1 - அலோபதி சிகிச்சை.*
*2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.*

*அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.*

*கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.*

*வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.*

*டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.*

*கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.*

*கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.*

*கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு.*

*கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.*

*இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.*

*இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.*

*இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.*

*கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?*

*உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.*

*கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.*

*உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.*

*பால் தயிராவது கிருமியால் தான்.*
*மாவு புளிப்பது கிருமியால் தான்.*
*சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.*
*பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.*
*குப்பை மட்குவது கிருமியால் தான்.*
*மண் வளமாவது கிருமியால் தான்.*
*உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.*
*ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.*

*உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.*

*உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.*

*நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.*

*நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.*

*இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.*

*அழிக்க வேண்டியது கொசுவையா ?*

*நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?*

*என நீங்களே முடிவு செய்யுங்கள்.*

*நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.*

*நன்றி*