புது மாப்பிள்ளை
இதை செயார் செய்வோம்
பல வாலிபர்களினதும், யுவதிகளினதும்.வாழ்க்கை பிரகாசமான தாக மாறும்
ஒவ்வொரு தம்பதியினரும் திருமணத்திற்கு முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய *ஆண்கள் பற்றியதும் #தாம்பாத்தியம் பற்றியதுமான உண்மை இது.
வெட்கப்படாமல் Shareசெய்யுங்கள், கொமெண்ட் செய்யுங்கள்.
இது பற்றிய அடிப்படை அறிவில்லாமல் கண்டவர் ஆலோசனைகளை கேட்டு வாழ்க்கையை நாசம் செய்ய வேண்டாம்.
பாடல்களை எடுத்துக் கொண்டாலோ அதன் வரிகள் விடிய, விடிய என்றும்,
படங்களை எடுத்துக் கொண்டால் கடிகாரம் சுத்தி சுத்தி சேவல் கூவி, சூரியன் உதிக்கும் வரையிலும் நடைபெறும்,
முதல் இரவு / உடல் உறவுக் காட்சிகளையும், ஆபாசப்படங்களையும் பார்த்து விட்டு, பெரும் கற்பனைகளுடன் போனால், அங்கு எல்லாமே ஒரு சில விநாடிகளில் முடிந்து, கனவுகள் சிதைந்து விவாகரத்து வரை போன பல வரலாறுகள் உண்டு. இந்த அறியாமையில் இருந்துவெளி வாருங்கள்ி
*திருமணம் முடித்த புதிதுகளில் ஒரு ஆண் தன் மனைவியின் அருகில் சென்றாலோ, தொட்டாலோ, முத்தம் இட்டாலோ என்று எந்த நிலையில் வேண்டுமானாலும் கிளர்ச்சி அடைந்து உச்சத்தை அடைந்து விடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
*இதை எல்லாம் வெற்றியாக தாண்டி வந்து உறவில் ஈடு படத் தொடங்கிய அடுத்த கணமோ,
ஏன் சில சமயம் உறவு கொள்ளப் போகிறேன் என்று நினைத்த அடுத்த நொடியில் கூட உச்சத்தை அடைந்து விடலாம்.
இதற்கு பயந்து ஆண்மை அற்றவன், வி/து முந்துகிறது, என்னால் முடியவில்லையே என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொள்ளவோ, வைத்தியரிடம் ஓடவோ வேண்டாம். பொறுமையாக கீழே வாசியுங்கள்.
ஒரு ஆணினால் எவ்வளவு நேரம் உறவு கொள்ளலாம்? என்று பொதுவாக கேட்டால்,
அது ஒரு சில வினாடிகள் முதல் 3-4-5 ... நிமிடங்கள் வரை என்று கூறலாம். ஆனால்,
அதையே ஒரு ஆண் பிறிதொரு ஒரு ஆணிடம் கேட்டால் ஆகக் குறைந்தது 20-30 நிமிடங்கள் என்று தான் கதை அளப்பார்கள்
(பாவம் இந்தக் கதையை ஒரு புது மாப்பிள்ளை கேட்டால் அவர் நிலமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்
திருமணம் முடித்த புதிதுகளில்,
*புது அனுபவம்,தனிமையில் பெண்ணின் நெருக்கம், தன் மனைவியின் அழகு, கவர்ச்சி, ஜாடைமொழிகள்,தடுமாற்றம்,காதல், அவசரம் என்று பல உணர்வுகளும், உணர்ச்சிகளும் முட்டி மோதும் இந்த எக்சைட்மண்ட் ஆன தருணத்தில் நன்றாக இருந்த உறுப்பு உறவுக்கு தயாராகாமல் கூட இருக்க வாய்ப்புண்டு. இப்படியான விபத்துகள் இந்த கால கட்டத்தில் நடப்பது சகஜமப்பா
*இதன் விளைவு,
பல இரவுகள் ஆசையோடு இருவரும் நெருங்குவீர்கள்,ஆனால் வெறும் 20-30 செக்கன்களில் ஆண் உச்சத்தை அடைந்துவிடுவதால் நிராசை மட்டும் தான் மிஞ்சும்.
இதே நிலை சில வாரங்கள் , மாதங்கள் வரை தொடரலம். இருவரும் பொறுமை, ஆறுதல், தைரியம், நம்பிக்கை இதில் எதை இழந்தாலும் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
இது போன்ற கட்டத்தில் அந்த மனைவி கணவனுக்கு கொடுக்கும் தைரியமும், உற்சாகமும் மாத்திரம் தான் அவனை மனதளவில் தைரியப்படுத்தி, தாழ்வு மனப்பான்மை இன்றி நம்பபிக்கையுடன் அடுத்த முறை அவளை நெருங்க முயற்சிக்க வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
*வாகனத்தை கையில் எடுத்தால் முதலில் ஓட்டப் படிக்க வேண்டும், பின்னர் அதன் நுணுக்கங்களை அனுபவம் மூலம் எடுக்க வேண்டும் அதன் பின்னர் தான் பந்தயத்தில் குதிக்க வேண்டும் அப்படித் தானே அதே போல் தான் இங்கும்....
*வெறும் 20-30 செக்கன்கள் இருந்த விடயத்தை, சில நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் தொடர்ச்ச்சியாக தினமும், ஒவ்வொரு தடவை உறவு கொள்கையிலும் மேற் கொள்வதன் மூலம் சில மாதங்கள் செல்கையில் படிப்படியாக 1-2 நிமிடங்களாக அதிகரித்து 4-5-6.. என்று கூட நீட்டிச் செல்ல முடியுமாகும்.
*என்ன செய்யலாம்?
*என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.
*எங்கே உச்சத்தை அடைந்து விடுவேனோ என்ற பயம், பதட்டம் வரவே கூடாது.
*எவரும் பார்ப்பார்களோ, சத்தம் கேட்டு விடுமோ யாரும் வந்து விடுவார்களோ என்ற பயம் கூடவே கூடாது.
*மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
*அவசரம், அதீத வெறி, எதை செய்கிறோம் என்ற நிலை தடுமாறி செயல்பட கூடாது.
*முழு மூச்சாக உறவில் மாத்திரமே கவனம் செலுத்தினால், புற விளையாட்டின் (Fore play) நடுவில் கூட திடீர் என்று உணர்ச்சி தூண்டப்பட்டு உச்சத்தை அடைந்து விடும் சாத்தியம் உண்டு.
*புற விளையாட்டுகளில் (Fore Play) ஈடுபடும் போதும், உறவில் ஈடு படும் போதும் இடைக்கிடையே தண்ணீர் குடித்தல்,
உறவின் ஒரு அங்கமாக ஒரு சொக்லட் அல்லது, திராட்சை, அப்பில் போன்ற எதாவது ஒரு பழத்தையோ இருவரும் சாப்பிட்டு (ரொமாண்டிக் பைட் - இதற்கும் விளக்கம் தேவை இல்லை தானே
இடை வெளி எடுத்தல் போன்ற செயல்கள் உங்களை நிதானப்படுத்தும்.
(என்னடா இது, அந்த நேரத்தில் இதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? இவனுக்கு என்ன லூசா? என்று கேட்போருக்கு,
இது போல் இடை வெளி எடுக்கவும், நிதானமாக செயல்படவும் தான் புது மனத் தம்பதிகள்.அறையில் பழம், இனிப்பு என்று உணவுகள் வைக்கப்படுகிறது என்பது கொசுருத் தகவல் ஆகும்)
*அதே போன்று இந்த சந்தர்பங்களில் மூச்சை ஆழமாகவும், நிதானமாகவும் இழுத்து சுவாசிப்பதன் மூலம் உங்களை ஆசுவாசப்படுத்தி, நிதானம் இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
*உறவு கொள்ளும் போது எடுத்த எடுப்பில் எகிரிக் குதிக்காமல் நிதானத்தை மேற் கொள்ள வேண்டும்,
*உச்சத்தை அடைய பார்க்கையில் உடனடியாக இயக்கத்தை நிறுத்த வேண்டும்.
(இதன் போது மிகச் சிறிய அளவில் வி/து வெளிவரவும் சாத்தியம் உண்டு, இது சாதாரண நிகழ்வே)
உருப்பினை வெளியில் எடுத்தோ, எடுக்காமலோ அசைவற்று இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சிறு அசைவு கூட உச்சத்தை அடைய வைத்திடும். அதனால் அசைவுகளை #இருவரும் முழுதாக நிறுத்த வேண்டும்.
இப்படி நிறுத்தும் போதும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது இன்னும் நிதானத்தை தருவதுடன் பதட்டத்தை குறைக்கும்.
உறவு கொள்ளும் போதும், இடை நடுவில் உச்சத்தை அடையப் போகிறோம் என்பது விளங்கும் போதும் மூச்சை தம் பிடித்து நிறுத்திக் கொள்வதும், உங்கள் நேரத்தை அதிகரிக்கும்.
உறவு கொள்ளும் நிலைகளை (Position) மாற்றி செய்கையில் கூட விரைவாக உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை குறைக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை, நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்யவும் பொதுவாக சொல்லப்படும் நிலை (ஆண் கீழே பெண் மேலே)
இது போன்ற எளிய வழிகளை #ஒன்றாக சேர்த்து கையாளும் போது, அதற்கான பலன் மெதுவாக #கிடைத்தே #ஆகும்.அதில் எந்த வித சந்தேகமும் கிடையவே கிடையாது.
ஆனால் மிக முக்கியமான விடயம் என்ன என்றால்..
இது உடலும், மனமும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். மூன்று நாள் ஜிம் சென்று நாலாவது நாள் பாடிபில்டர் (Bodybuilders) ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போல் இங்கும் பதரினால் விடயம் சிதறிடும்.
நம்பிக்கை, பொறுமை, நிதானம், பயிற்சி உங்களுக்கான வழியை சரியாக காண்பிக்கும், அதற்கு காலமும் தேவைப்படும்.
*படங்களை போல் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் உறவில் திருப்தி கிடைக்காது என்றும் மனைவிடம் மானம் போய் விடும் என்றும் கூறி " மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்து கொண்டு போ, டெப்லட், ஸ்ப்ரே பாவி மச்சான்" என்று எல்லாம் சில அதி மேதாவிகள் தரும் மொக்கை ஆலோசனைக் கேட்டு விடாதீர்கள்.
*முதலில் சுய இன்பம் செய்துவிட்டு, பின்னர் உறவில் ஈடுபடும் போது களைப்பு அதிகமாக இருக்கும், சில சமயம் உறுப்பு தயார் நிலைக்கு வராமல் போகும், ஆண் உறுப்பில் வேதனை வரலாம். அல்லது,
*சுய இன்பம் செய்த பின் கூட எதிர்பாரா உச்சத்தை இடையில் அடைந்து விட்டால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது கடினம் ஆகிவிடும்.
*செயற்கை முறைகளில் டெப்லட், கிரீம்,ஸ்ப்ரே என்று முயற்சிகள் செய்து ஆண்மையை இழந்து விடாதீர்கள், மேலும் இவற்றை பாவித்து நீண்ட நேர உறவிற்கு மனைவியை பழக்கிக் கொண்டால் தினமும் அவர்கள் அதையே எதிர்பார்ப்பார்கள் உங்கள் வாழ்க்கை பாழாகிவிடும்.
*எனவே மனைவியிடம் போலி வீராப்பு காட்டாமல் இப்படித் தான் முதலில் இருக்கும் என்பதை விளக்கி அவளிடமே ஒவ்வொரு தடவையும் உறவில் ஈடுபடுங்கள்.
*மதுபானம், மற்றும் போதை ஏற்றிக்கொண்டு உறவு கொண்டால் இன்பமும் பெருகும், அதிக நேரமும் செயல்படலாம் என்ற போலிகளை நம்பி குழியில் விழுந்து விடாதீர்கள்.
*இது போல் இடை வெளி எடுத்து செயல்படும் போது முதலில் ஓரு சிறு அதிருப்தி பெண்களுக்கு வந்தாலும், யதார்த்த நிலையை அவர்கள் உணரும் போது அது ஒரு பொருட்டாக அவர்கள் மனதில் இருக்காது.
*இருவரும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
*உறவிற்கு தாயார் நிலையில் ஆண்களுக்கு நிறம் அற்ற ஒரு திரவம் சுரக்கும்.இது குறை கிடையாது.
*உறவு கொள்ளும் நேரம் ஒவ்வொரு முறையும் வித்தியாசப்படும், ஒரு தடவை ஒரு நிமிடம் என்றால் மறு தடவை முப்பது செக்கன் இருக்கும் அல்லது இரண்டு நிமிடம் இருக்கும் இது சர்வ சாதாரண நிகழ்வாகும்.
*ஆண் உறுப்பின் அளவிற்கும் உறவு கொள்ளும் நேரத்திற்கும், பெண்கள் திருப்தி அடைவதற்கும் எந்த விதமான விஞ்ஞான ரீதியான தொடர்பும் கிடையவே கிடையது.
(In fact எல்லா ஆண்களும் தன் உறுப்பு இன்னும் கொஞ்சம் நீ/மாக இருந்தால் நல்லமே என்று கவலைப்படுபது சாதாரண விடயம் ஆகும். பொய் என்றால் அவர்களையே கேட்டுப் பாருங்கள்
*சில நாட்களுக்கு வழமையான அளவை விட ஆண் உறுப்பு மெலிந்து காணப்படும், இதற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடி விட வேண்டம் இதுவும் சாதாரண விடயமே. அது தானாக பழைய நிலைக்கு சில நாட்களில் திரும்பி விடும்.
*உறவு கொள்ளும் ஒவ்வொரு நேரமும் வாய், உடல் சுத்தம் அவசியம் பேணப்பட வேண்டும்.
*தேவை அற்ற ரோமங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.
*புகைத்தல், மது,கஞ்சா, பீடா என்று கண்டதையும் போட்டுக் கொண்டு மனைவியை நெருங்காதீர்கல்.
*உண்மையை கூறப்போனால், இது போன்ற தீய செயல்களை நிறுத்தி அந்த பணத்திற்கு பாதம், பிஸ்தா என்று தினமும் வாங்கி சாப்பிட்டால் இல்லற வாழ்வு சிறப்பிக்கும்
*ஆரோக்கியமான உணவு, உடல் பயிற்சிகளை தொடராக செய்து வருகையில் உடல் பலம் அதிகரிக்கும்.
*அருவருப்பான சில விடயங்களை செய்வதற்கு முண்டி அடித்து அவசரப்பட்டு, வற்புறுத்தல் உங்கள் மீதான வெறுப்பை யும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும். (ஒரு பக்குவ நிலை வந்ததன் பின்னர் தான் கணவன் மனைவிக்கு இடையில் அருவருப்பான எதுவும் கிடையாது என்பது புரிய வரும்)
*ஒரு மனிதனால் சாதாரணமாக உறவு கொள்ளக் கூடிய 2-3 நிமிடத்தை விந்து முந்துதல், ஆண்மைக் குறைபாட்டு நோய் என்று விளம்பரம் செய்து பிழைக்கும் போலி விளம்பரங்கள், ஆன்லைன் மசாலா டாக்டர்களின் கதைகளை கேட்டு மூளை கெட்டு, பித்துப் பிடித்து திரியாதீர்கள்.
*கண்ட கண்டவர்களிடம் கதை கேட்டு உங்கள் இன்பத்தை தொலைக்க போக வேண்டாம்.உங்களுக்கு உள்ள இன்பத்தை நேரம் எடுத்து, காலம் ஒதுக்கி உங்களுக்குள் தேடுங்கள். மன அழுத்தம் இன்றி இன்பமாக வாழ்வீர்கள்
*இது எல்லாம் தாண்டி இரண்டு மூன்று மாதம் வாழும் போது "அட இதுக்கு தான் இப்படி பயந்தேனா?இதற்கு தான் இப்படி டென்ஷன் ஆகிக் கொண்டு திரிந்தேனா?" என்ற ஒரு முதிர்ச்சிக்கு வரும் போது ஒரு சிரிப்பு வரும் பாருங்கள், அது உங்கள் இல்லற வாழ்வின் வெற்றிப்படியாகும்.
வாழ்த்துகள்